மாந்தநேயப் பணி தொடர வாழ்த்துகின்றோம்
May 12, 2009
இன்று ஈழத் தந்தை செல்வா அவர்களின் புதல்வரும், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் மற்றும் பொருளாளருமான திரு.சா.செ.சந்திரகாசன் அவர்களின் 67 வது பிறந்த நாள் ஆகும். புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் அகதி மக்களுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய பணிகளை ஆற்றி வருவதுடன், மக்கள் பணியே தனது வாழ்க்கை என்று எண்ணி சேவையாற்றி வருகிறார். தமிழர் வரலாற்றின் முக்கியமான காலப் பகுதியான இந்த நேரத்தில் அவரின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரின் மாந்தநேயப் பணி புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழ் உலகுக்கும் என்றும் தொடர வேண்டும் என்று வேண்டி இந்த பொன்னாளில் வாழ்த்துகின்றோம்.
குடும்பத்தினர்,
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.

Advertisement
No comments yet